தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் வாரவழிபாட்டில் பரிசுகள் பெற்றதற்கு
பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.விழாவில் ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகர சிவன் கோவிலில் நடைபெறும் வாரவழிபாட்டுக் கூட்டத்தில் தொடர்ந்து 52 வாரங்களுக்கு மேல் பங்கேற்ற இப்பள்ளி மாணவர்கள் தனுதர்ஷினி,புகழேந்தி,ஜெயஸ்ரீ,ஜனஸ்ரீ ,நாகமணிகண்டன் வெங்கட்ராமன் ஆகிய ஆறு பேரும் பரிசு பெற்றனர். பரிசுகள் பெற்று சாதனை படைத்தத மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிறைவாக பள்ளி ஆசிரியை செல்வ மீனாள் நன்றி கூறினார்
வார வழிபாட்டில் சாதனை செய்த மாணவர்கள். தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக பரிசுகளை குவித்த மாணவர்கள்
எழுதியவர்: mohan March 5, 2020, 10:26 am




You must be logged in to post a comment.