திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் மேல்வணக்கம்பாடி கிராமத்தில் மேல்வணக்கம்பாடி ஆண்டிப்பட்டி புளியாம்பட்டி பகுதிகளை சேர்ந்த 206 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கி பேசினார். முன்னதாக ஊராட்சிமன்ற தலைவர் கோவிந்தசாமி வரவேற்றுபேசினார் நிகழ்சசியில் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமசந்திரன் அதிமுக நிர்வாகிகள் மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாச்சலம் முன்னாள் எம்.எல்.எ வீரபாண்டியன் கூட்டுறவு சங்க தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, வளாயம்பட்டு சங்கர் ஜெயபிரகாஷ் நகர பேரவை செயலாளர் குமார் மண்டல பொருப்பாளர் புதுப்பட்டு தனஞ்செயன் கூட்டுறவு சங்க துணைத்தலைவர்கள் கோபி முரளி மகரிஷி பள்ளி தலைவர் மனோகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேல்வணக்கம்பாடி கிராமத்தில் 206 விலையில்லா ஆடுகள் – அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வழங்கினார்..
எழுதியவர்: Askar February 26, 2020, 7:09 pm




You must be logged in to post a comment.