18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28ல் கொண்டாடப்படுகிறது.

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28ல் கொண்டாடப்படுகிறது.

எழுதியவர்: mohan February 26, 2020, 9:46 am

சிறந்த இயற்பியல் மேதை சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதிதேசிய அறிவியல் தினமாக இந்தியாவில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.நேரு நினைவு கல்லூரி, இயற்பியல் துறை சார்பாக பிப்ரவரி 28ல் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டுகிறது. இதில் மதுரை தியகராஜர் கல்லூரி பேராசிரியர் முனைவர் மாணிக்கம் மஹேந்திரன் அவர்கள் பங்கு பெற்று பழங்கால இந்தியாவில் நானோ தொழில்நுட்பம் குறித்து பேச உள்ளார். பழங்கால நானோ தொழில்நுட்பம் என்பது நாட்டுப்புற தோசையும் நானோ தொழில்நுட்பமும் (Nanotechnology), வைக்கோல் விளக்கு எண்ணெய்யும் நானோ துகளும் (Nanoparticles), கருவேல மர கண் மையும் நானோ துகளும் (Nanoparticles), களிமண்ணும் நானோ கலவையும் (Nano Composites), மரியாத்தாளும் நவீன அறிவியலும் (Advance Nanomaterials), மற்றும் தொட்டில் குழந்தையும் சீரிசை இயக்கமும் (Simple Harmonic Motions) போன்ற தலைப்புகளீன் உள்ளடக்கமாகும்.விழாவில் இறுதில் வினாடி வினா மற்றும் அறிவியல் காகித விளக்கக்காட்சி போன்றவை இடம்பெறும்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!