கீழக்கரையில் நாளை (21/02/2020). மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்தும், சென்னை வண்ணாரப்பேட்டையில் ஜனநாயக வழியில் போராடிய பொதுமக்கள் மீது தடியடி நடத்த உத்தரவு வழங்கிய தமிழக அரசை கண்டித்தும் கீழக்கரை வர்த்தக சங்க ஒத்துழைப்புடன் அனைத்து மதசார்பற்ற அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளுடன் இணைந்து ஒரு நாள் முழ கடை அடைப்பு போராட்டம் காலை 06.00 முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இப்போராட்டத்தினால் பொது மக்கள் பாதிப்படையாமல் இருக்க வீடுகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைக்கவும், பொதுநல நோக்குடன் நடக்கும் இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.





You must be logged in to post a comment.