ஆனந்தம் திட்டத்தின் கீழ் மதுரை மாநகர காவல்துறை, சரவணா மருத்துவமனை மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாமை திருப்பரங்குன்றம் கண்ணா திருமண மஹாலில் நடத்தினர்.
இம்முகாமில் கண், பல், நுரையீரல், இரத்த பரிசோதனை, இ.சி.ஜி, எக்கோ போன்ற பலதரப்பட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டன. 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்







You must be logged in to post a comment.