17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » பிப்ரவாி16 – தாதா சாகேப் பால்கே என்று அழைக்கப்படும் கோவிந்த் பால்கே நினைவு நாள்.

பிப்ரவாி16 – தாதா சாகேப் பால்கே என்று அழைக்கப்படும் கோவிந்த் பால்கே நினைவு நாள்.

எழுதியவர்: mohan February 16, 2020, 10:48 am

இன்று பிப்ரவாி16 -தாதா சாகேப் பால்கே என்று அழைக்கப்படும் கோவிந்த் பால்கே நினைவு நாள்._இவர் இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்..பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார்.படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை.தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே.எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்.இவர் தனது 73-வது வயதில் 1944-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி இயற்கை எய்தினார்.அவருடைய நினைவாக இந்திய திரைப்படத் துறையின் உயரிய விருதான தாதா சாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது.

தகவல் : இரமேஷ், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!