அவனியாபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அதிகுந்த கண்ணன் அவனியாபுரம், சுண்ணாம்பு காளவாசல் எதிரில் ரோந்து பணியில் இருந்தபோது மதுரையை சேர்ந்த மூக்கம்மாள் 60, என்பவர் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் செல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சோமு செல்லூர் குமரன் சாலையில் ரோந்து பணியில் இருந்தபோது மகாலெட்சுமி 34, என்பவர் கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1.950 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.100/- -ம் கைப்பற்றப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.