தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் சீனிவாச சேகர் தலைமையில் பொது நிதி மேலாண்மை குறித்து பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சி தலைவர், து.தலைவர்கள் மற்றும் செயலர்களுக்கு விளக்க கூட்டம் நடைப்பெற்றது .இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன், கெளரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில் ஊராட்சி வரவு – செலவு கணக்குகள் கணிணியில் பதிவு செய்து ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனைகளை எவ்வாறு மேற்கொள்வது அவசர செலவுகளை எவ்வாறு செய்வது எதற்க்கு மட்டும் காசோலையை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்து .இக் கூட்டற்திற்க்கு 32 ஊராட்சி தலைவர்கள் , துணை தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற செயலர்கள் கலந்து கொண்டனர்.
பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுக்கு பொது நிதி மேலாண்மை கருத்தரங்கம்
எழுதியவர்: mohan February 7, 2020, 10:29 am




You must be logged in to post a comment.