மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருபவர் வைரமணி (33).இவர் காலை வழக்கம் போல் கடையைத் திறக்;கும் பொழுது மேற்க்கூரை
உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து (வாட்டர் புரூப் தகரத்தால் ஆனது ) கடைக்குள் சென்று பார்த்தார்.அங்கு கம்யூட்டரிலுள்ள கார்டு டிஸ்க் மற்றும் கேமரா திருடப்பட்டிருப்பதைக் கண்டு போலிசாருக்குத் தகவல் கொடுத்தார்.உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் வந்து விசாரணை செய்ததில் மர்ம நபர்கள் மேல் கூரையை உடைத்து கடையிலிருந்த கேமரா கார்டு டிஸ்க் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.இதன் மொத்த மதிப்பு ரூ5 லட்சம் ஆகும்.இது குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
உசிலை சிந்தனியா




You must be logged in to post a comment.