இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அரசு மேல்நிலை பள்ளியில் 2009-2010 ஆம் கல்வி ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர் சந்திப்பு நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வேல் தலைமை வகித்தார்.
இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர் 45 பேர் இணைந்து பள்ளிக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பில் இன்வெர்ட்டர் சாதனம் நினைவு பரிசு வழங்கினர். முன்னாள் மாணவர் கால்வின் மில்லர் நினைவாக ஆசிரியர்கள் கே.வேலு, ஏ.ஜஸ்டின், எம்.வீரபாண்டி, எஸ்.அஜிதாகுமாரி, பி.கல்யாண மீனா, எஸ்.முத்துராமலிங்கம் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆர்.நம்பு வினிதன் நன்றி கூறினார்.






You must be logged in to post a comment.