நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு, புதுச்சேரியில் செய்யது நிஜாமிஷா நூரி பாக்கவி அவர்களின் தலைமையில் பல வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் ஆலிம்களுக்கான ஆய்வு, மற்றும் பன்முக மேம் பாட்டு பயிற்சி மையம், மர்க்கஜ் அல்- இஸ்லாஹ்-ல் குடியரசு தின விழா நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கிருமாம்பாக்கம் காவல் துறை துணை ஆய்வாளர் பாண்டியன் அவர்கள் கலந்துக் கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார்.
மேலும் மர்க்கஜ் அல்-இஸ்லாஹின் பேராசிரியர்கள், மாணவர்கள், ஆலிம்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.




You must be logged in to post a comment.