எந்த ஓரு புதிய சூரிய கதிரும் வந்து பூமிக்கு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. அப்படி ஏதோ கதிர்கள்/அகச்சிவப்பு கதிர்கள் வந்து பூமியிலுள்ள உணவை பாதிப்படையச் செய்வதாக ஊடகங்கள் மற்றும் சோதிடர்கள் புரளியைக் கிளப்பி வடுகின்றனர். சூரிய கிரகணத்தின்போது பாதிப்பை உருவாக்கும் கதிர்கள் சூரியனிலிருந்து வருவதில்லை. எப்போதும் வரும் கதிர்களே சூரிய கிரகணத்தின்போதும் வருகின்றன. அந்த அகச்சிவப்பு கதிர்கள் எப்போதும் வருபவை தான். சூரியனிடமிருந்து வரும் அகச்சிவப்பு கதிர்கள் தான் பூமியை, வளிமண்டலத்தை மற்றும் அதன் மேலுள்ள பொருட்களை சூடாக்குகிறது. அவை உணவை பாழாக்காது. எனவே நீங்கள் சூரிய கிரகணத்தின்போது தாரளமாக சாப்பிடலாம். உங்கள் நண்பர்களையும் சாப்பிடச்சொல்லலாம்.
சூரிய கிரகணத்தின்போது உணவு உண்ணக்கூடாது, ஏன்? சூரியனிலிருந்து ஏதாவது சிறப்பு கதிர்கள் வருகின்றனவா?
எழுதியவர்: mohan December 26, 2019, 1:49 pm




You must be logged in to post a comment.