திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே விட்டல்
நாயக்கன்பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை அச்சடித்து வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் விற்பனை செய்து வந்த ஈஸ்வரன்(33) அவரது மனைவி கார்த்திகா(28) ஆகியோரை வேடசந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் இளவரசன் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து மடிக்கணினி, பிரிண்டர், லாட்டரிசீட்டுகள் மற்றும் ரூபாய் 2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.ஈஸ்வரன் அவரது மனைவி கார்த்திகா ஆகியோரை வேடசந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை அச்சடித்து விற்பனை செய்த தம்பதியினர் கைது
எழுதியவர்: mohan December 24, 2019, 12:33 pm




You must be logged in to post a comment.