மதுரை மாட்டுத்தாவணி அருகே தனியார் ஓட்டலில் சர்வதேச தமிழ் பல்கலை கழகம் சார்பில் 39 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இவ்விழாவில் 36 பேருக்கு மதிப்புறு முனைவர் பட்டமும், மற்றும் பல்வேறு துறைகளில் சமூக சேவை செய்து வரும் சமூக சேவகர்களை அடையாளம் கண்டு அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாகவும், துறைசார்ந்த சாதனைகளை
ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் 40 பேரை தேர்ந்தெடுத்து பாரத சேவா, பாரத ஜோதி போன்ற விருதுகள் வழங்கப்பட்டது.இவ்விழாவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் கண்காணிப்பாளர் ஆர். சோலைமலை தமிழ் சினிமா தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி போன்றோர் சிரப் பு அழைப்பாளர்களாக கலந்து கொண்பனர்.இந்த பட்டமளிப்பு விழாவில் சென்னை கடலூர் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் துபாய், பக்ரைன் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.