இராமநாதபுரம் அருகே அச்சந்தன்வயல் பகுதியில் பறவைகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி இராமநாதபுரம் வன உயிரின சரக அலுவலர்கள் ரோந்து சென்றனர்,அப்போது, அச்சுந்தன்வயல் சேதுபதி அரசு கலைக் கல்லூரி அருகே வேட்டையாடிய பறவைகளுடன் இரு சக்கர வாகனத்தில் தப்ப முயன்ற ஒருவரை பிடித்தனர். அவரிடமிருந்து அரியவகை 7 ஊசிவால் வாத்துகளை பறிமுதல் செய்தனர். முருகன் மீது வழக்கு பதிந்து விசாரித்தனர். பறிமுதல் செய்த ஊசி வால் வாத்துகளை வன உயிரின காப்பாளர் அசோக்குமார், மாவட்ட வன அலுவலர் அருண்குமார் ஆகியோர் தலைமையில் தேர்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் பாதுகாப்பாக விடப்பட்டது.
இராமநாதபுரம் அருகே பறவைகளை வேட்டையாடியவர் கைது
எழுதியவர்: mohan December 18, 2019, 3:56 pm




You must be logged in to post a comment.