இராமநாதபுரம் காவல் பணியிடைப் பயிற்சி மைய தலைமை காவலர் சுபாஷ் சீனிவாசன், 42. மரங்களை நேசிக்கும் பசுமை காப்பாளரான இவர், தமிழகத்தின் பல்வேறு நகரங்களின் சாலை ஓர மரங்கள் மீது .அடிக்கப்பட்டிருந்த ஏராளமான ஆணிகளை அப்புறப்படுத்தி வருகிறார். இவரின் சமூக சேவைக்கு பல்வேறு அமைப்புகள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளன. தமிழக முதல்வர் ஜெயலலிதா, அண்ணா விருது வழங்கி உள்ளார். தந்தை வழியில் தனயன் என்பதற்கு இணங்க இவரது மகன் (ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக விவேகானந்தா மெட்ரிக்., பள்ளி எல்கேஜி மாணவர்சுபாஷ் எஸ்.கவின் சேதுபதி 3 பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை தெளிச்சாத்தநல்லூர் முதல் இராமநாதபுரம் மாவட்ட எல்லை முடிவு வரை சாலைகளின் இரு புறமும் 500 விதைப்பந்துகள் (வேம்பு, புங்கை) வீசி எறிந்தார்.
விதைப்பந்து தூவலில் ஆர்வம் காட்டும் இராமநாதபுரம் எல்கேஜி., சிறுவன்
எழுதியவர்: mohan December 16, 2019, 9:36 am




You must be logged in to post a comment.