மக்கள் உரிமைகள் இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை குயவர் திருமண மண்டபத்தில், மக்கள் உரிமைகள் இயக்கம் மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் “மனித உரிமைகள் தின கருத்தரங்கம்” நிகழ்ச்சியில் மக்கள் உரிமைகள் இயக்கத்தின் நிறுவன தலைவர் சிறப்புரையாற்றினார். சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ந.சீனுவாசன், காலேஜ் கு.ரவி, சு.ராஜாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பேராசிரியர் சு.பிரேம்குமார் மனித உரிமைகள் தின உரையாற்றினார், லயன்ஸ் மாவட்ட தலைவர் MC சிவா கனிவுரையாற்றினார். மக்கள் உரிமைகள் இயக்கத்தின் மாநில செயலாளர் நாகராஜன் துவக்கவுரையும், மக்கள் உரிமைகள் இயக்கம் மாவட்ட செயலாளர் M.காண்டீபன் வரவேற்று, N.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.. மற்றும் நிகழ்ச்சியில் மக்கள் உரிமைகள் இயக்கத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
“மனித உரிமைகள் தின கருத்தரங்கம்”
எழுதியவர்: mohan December 15, 2019, 11:01 am




You must be logged in to post a comment.