17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குப்பைகளை அள்ள மறந்த பாப்பாரப்பட்டி பேரூராட்சி சத்திரம் முஸ்லிம் தெருவில் நீண்ட நாட்களாக கிடக்கும் குப்பைகள்

குப்பைகளை அள்ள மறந்த பாப்பாரப்பட்டி பேரூராட்சி சத்திரம் முஸ்லிம் தெருவில் நீண்ட நாட்களாக கிடக்கும் குப்பைகள்

எழுதியவர்: mohan December 10, 2019, 3:06 pm
பாப்பாரப்பட்டி  டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட சத்திரம் முஸ்லிம் தெரு 6 வார்டில்  கழிவு குப்பைகள் சுத்தம் செய்ய மறந்த பாப்பாரப்பட்டி பேரூராட்சி தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்து முஸ்லிம்கள் வாழும் பகுதி சத்திரம் முஸ்லிம் தெரு. இப்பகுதியில் 500 குடும்பங்கள் உள்ளது மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் சிறு குழந்தைகள். மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் இருந்து ஊழியர்கள் குப்பை அள்ள யாரும் வருவதில்லை   என்றனர். மற்றும் இப்பகுதியில் வாழும் குழந்தைகளுக்கு இந்த   குப்பையில் இருந்து  வரும் துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லை அதிகமாக  இருப்பதனால் இப்பகுதி மக்கள் பாப்பாரப்பட்டி பேரூராட்சி ஊழியர்கள் தெருவில் கிடக்கும் குப்பைகளை அள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!