மதுரை மாவட்ட ஆட்சியாளர் வீரராகவ ராவ் இருந்தபொழுது மதுரை கலெக்டர் என முகநூல் துவங்கப்பட்டது .அவ்வப்போது
பொதுமக்களும் அதில் புகார் தெரிவித்து வந்தனர் .அதில் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது .மேலும் மாவட்ட நிர்வாகம் செயல்படும் நலத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பதிவுகளும் அதில் பதிவிட்டு பட்டு வந்துகொண்டிருந்தன. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக எந்த ஒரு பதிவும் மற்றும் புகார்களுக்கு பதிலளிக்காமல் செயல் இழந்து உள்ளது. இதனை மாவட்ட ஆட்சியாளர் தனி கவனம் செலுத்தி மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.