மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 75 வது வார்டுகளில் டெங்குவை ஒழிக்கும் நோக்கில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் வீடுவீடாக சென்று மற்றும் அலுவலர்கள் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் டெங்கு கொசுக்களை மருந்து அளித்து வருகிறார்கள். பொதுமக்கள் ஏதோ இவர்கள் நம்மளை தொல்லை செய்வதாக எண்ணி சிலர் உள்ளே விடமறுக்கின்றனா்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில் டெங்கு ஒழிப்பில் தீவிரம் காட்டி வருகிறோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் டெங்குவை முற்றிலும் ஒழிக்க முடியும் .வீடுவீடாக சென்று நாங்கள் தேங்கியுள்ள நீரினை அகற்றி வருகிறோம். எனினும் பொதுமக்களுக்கு ஒரு சிலர் ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தினால் டெங்கு கொசு வருவதற்கான காரணமாகி விடுகிறது பொதுமக்கள் முழு ஒத்துழைப்புக் கொடுத்து டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டும் என தகவல் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.