சாதாரணமாக அரவாணிகள் பஸ்கள் – ரயில்களில் பயணிகளிடம் பணம் வசூல் செய்வதை பார்த்திருக்கலாம். ஆனால் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் பிரபல ஓட்டல் ஒன்றில் நடந்த திருமணத்தில் அரவாணிகள் கும்பல் நுழைந்து கட்டாய வசூலில் ஈடுபட்டது. திருமண வீட்டிற்கு வந்தவர்களை முகம் சுளிக்குமளவு நடந்து கொண்டனர். பணம் வசூல் செய்வதற்காக வந்தவர்கள் திருமண வீட்டாரிடம் தாலி கட்டும் நேரத்தில் மேடையில் நுழைந்து கைகளை தட்டி அதிக அளவு வசூல் பணம் கேட்க அவர்கள் முறைக்க கடுமையான வார்த்தைகளை உபயோகிக்க துவங்கி விட்டனர். பின்னர் ஒரு வழியாக திருமண விழாவிற்கு வந்த இளைஞர்கள் பேசி சமாதானப்படுத்தி பணத்தை அன்பளிப்பாக வழங்கி அரவாணிகளை அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.