17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வழிப்பறியில் ஈடுபட்டவா்கள் கைது

வழிப்பறியில் ஈடுபட்டவா்கள் கைது

எழுதியவர்: mohan November 23, 2019, 3:56 pm

சமயநல்லூர் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் DSP ஆனந்த் ஆரோக்கியராஜ்  தலைமையில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த அலங்காநல்லூர் கோட்டைமேடு ராமர் மகன் ஜெயகிருஷ்ணன்(23) குறவன்குளம் மணிகண்டன் மகன் சூரியகுமார்(22) என தெரியவந்தது. இவர்கள் பெண்களிடம் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பதை கண்டறிந்த போலீசார், விசாரணை செய்ததில் NP கோட்டை, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், சமயநல்லூர் ஆகிய பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடம் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 38 பவுன் தங்க நகைகளை மீட்டு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!