நிலக்கோட்டையில் ஒன்றிய அளவிலான அனைத்து தூய்மை காவலர் களுக்கும் ஒரு நாள்பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ் தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் குணவதி முன்னிலை வகித்தார். பொறியாளர் டெல்லி ராஜா வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்குமார், தங்கப்பாண்டி ஆகியோர் தூய்மை காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். டாக்டர் சஞ்சன் ராஜா தலைமையிலான மருத்துவ குழுவினர் தூய்மை காவலர் களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். முகாமில் 198 தூய்மை காவலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பணியாளர்கள் உள்பட ஏராளமானோர்கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி ஒன்றிய அலுவலர் மனோகரன் நன்றி கூறினார்.
நிலக்கோட்டையில் அனைத்து தூய்மை காவலர் களுக்கும் பயிற்சி முகாம்
எழுதியவர்: mohan November 23, 2019, 12:15 pm




You must be logged in to post a comment.