17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு மாடு, அடையாளம் தெரியாத பெண் பிணம் 

நிலக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு மாடு, அடையாளம் தெரியாத பெண் பிணம் 

எழுதியவர்: mohan November 21, 2019, 1:05 pm

தேனி மாவட்டம் வருச நாடு பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் ஆண்டிபட்டி வைகை அணையில் இருந்து பெரியார் பிரதான சிமெண்டு கால்வாயில் பாசனத்திற்க்காக தண்ணீர் கூடுதலாக திற்க்கப்பட்டு தண்ணீர் கரை புரண்டு செல்கிறது.    இப்படி வரும் தண்ணிரில் கால்வாய் பகுதியை ஒட்டியுள்ள கிராம பொதுமக்கள் குழிப்பதற்கும், ஆடு, மாடுகளை குழிப்பாட்டுதற்கும் செல்லும் போது தவறி விழுந்து விடுகிறார்க்ள. அப்படி இரண்டு தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில், அல்லது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆற்றங்கரை கிராமப்புற பகுதி மக்களில் யாரோ ஒருவர்  அடையாள தெரியதாத பெண் மாட்டுடன் இழத்து  வரப்பட்டதை வத்தல்குண்டு அருகே உள்ள ஏ.வாடிப்பட்டி பொது மக்கள் பார்த்து விடுவீடு,விளாம்பட்டி போலீஸ் க்கு தகவல் கொடுத்தனார். உடனே போலீஸ் கால்வாயில் தேடியது. அந்த பிணம் நிலக்கோட்டை அருகே உள்ள மட்ட பாறை 10 கண் பாலத்தில் தோங்கி கிடந்த குப்பைகளுடன் சேர்ந்த மாடு, பெண் பிணம் ஒதுங்கியது. பின்னர் உடனே நிலக்கோட்டை தீயணைப்பு நிலையதிற்கு விளாம்பட்டி போலீசார் தாவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து  தீயணைப்பு  நிலைய அலுவலர் முத்துசாமி பொறுப்பு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கொட்டும் மழையை பொருட்டு  படுத்தாமல் இரவு நேரம் மின்விளக்கு இல்லாமல் தீயணைப்புத் வீரர்களால் உயிரை பணையம் வைத்து போராடி மீட்டனர்.     இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அடையாளம் தெரியாத பெண் பிணத்தை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது | நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!