திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மத நல்லிணக்க கருத்தரங்கம் செவ்வாய் அன்று நடைபெற்றது.
திருவண்ணாமலை செட்டித்தெரு உண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு, ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் அருண் பாட்சா தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜோதி சங்கர் வரவேற்றார். ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஆர். மனோகரன் துவக்க உரையாற்றினார். சமூக செயற்பாட்டாளர் மற்றும் ஊடகவியலாளர் கே. கனகராஜ் கருத்துரை நிகழ்த்தினார். ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்
மத நல்லிணக்க கருத்தரங்கம்
எழுதியவர்: mohan November 20, 2019, 1:17 pm




You must be logged in to post a comment.