வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது; மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள வாலாந்தூர் செல்லம்பட்டி வின்னகுடி குறவகுடி போன்ற பகுதிகளில் கார்த்திகை மாதத்தில் நெல் பயிரிடுவது வழக்கம்.தற்போது இப்பகுதிகளில் ஏற்கனவே அவ்வப்பொழுது மழை பெய்து வருவதாலும் வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் நெல் நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.தற்பொழுது; டிராக்டர் மூலம் உழுதல் நாற்று நடுதல் போன்ற பணிகளில் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர்.இதனால் கிராமப் பகுதிகளில் விவசாய வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி பகுதியில் நெல் நடவுப்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
எழுதியவர்: mohan November 19, 2019, 3:35 pm




You must be logged in to post a comment.