கீழக்கரையில் இன்று (18.11.2019)இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் 2019 – 2021 தொடக்க விழா முகம்மது சதக் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு வருகை பள்ளிக்கலவி, இறைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மாவட்ட ஆட்சி தலைவர் வீர்ராகவராவ், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் வி.சி இராமேஸ்வரமுருகன், சட்டமன்ற உருப்பினர்கள் மணிகண்டன், கருனாஸ், பாண்டி, சதன் பிரபாகர், இராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது கீழக்கரை இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் மற்றும் அஇஅதிமுக கீழக்கரை நகர் கழக
அவைத்தலைவர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து அமைச்சரை வரவேற்றார்.
இந்நிகழ்வின் போது அஇஅதிமுக நகர் செயலாலர் ஜகுபர் சாதிக், இளைஞ்ர் அணி செயலாலர் சரவண பாலாஜி உடன் இருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்







You must be logged in to post a comment.