திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிப்பிடம் இல்லாமல் தவித்து வரும் ஆதிதிராவிட மக்களுக்கு, குடிமனைப்பட்டா வழங்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியரிடம் கோரிககை மனு
அளித்துள்ளனர். திங்கள் அன்று 300 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது அவர்கள் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,நாங்கள் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், தரடாப்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் குடும்பத்துடன் வசிப்பதற்கு சொந்தமாக வீடு இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே, ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக எங்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
வீடு இல்லாமல் தவிக்கும் ஆதிதிராவிட மக்கள். குடிமனைப்பட்டா வழங்க கோரிக்கை
எழுதியவர்: mohan November 18, 2019, 3:45 pm




You must be logged in to post a comment.