17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வண்டு கடித்து அதிமுக பிரமுகர் பலி.!

வண்டு கடித்து அதிமுக பிரமுகர் பலி.!

எழுதியவர்: Askar November 2, 2019, 9:45 pm

புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளராக இருந்து வந்தார். மேலும் மணவெளி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.இந்நிலையில், இவர் விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு சென்றபோது அவரை விஷவண்டு கடித்ததாக தெரிகிறது. இதையடுத்து மயங்கி விழந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!