
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோலிவுட்டில் அதிகமாக பேசப்பட்டது – திருமணம். என்ற படத்தின் மூலம் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர். சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண நிகழ்ச்சியில் இருவீட்டாரும் கலந்து கொண்டனர். ஆனால், குறித்து வெளியில் தகவல் வெளியானால், அவரது சினிமா வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இது குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனினும், இருவரும் சென்னையில் வீடு எடுத்து தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், அதிதி மேனன் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகவும் வீட்டிலிருந்து தங்க நகைகளை எடுத்துக் கொண்டு கேரளாவிற்கு சென்றுவிட்டதாகவும், அபி சரவணன் புகார் தெரிவித்தார். ஆனால், நான் அவரை காதலித்தேனே தவிர, திருமணம் செய்யவில்லை என்று அதிதி மேனன் தெரிவிக்க, தன்னிடம் இருந்த திருமணம் ஆனதற்கான ஆதாரங்களை அபி சரவணன் வெளியிட்டார். இதையடுத்து, அதிதி மேனன், விவாகரத்து கேட்டு மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை நடந்து வரும் நிலையில், மனைவியுடன் சமரசம் செய்து தங்களை சேர்த்து வைத்து புதிதாக வாழ்க்கையை தொடங்க நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம், அதிதி மேனன் மட்டும் தொடர்ந்து கோர்ட்டுக்கு வராமல் தட்டிக் கழித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று (1/11/2019) விசாரணைக்கு வந்த அதிதியை நீதிபதி எச்சரித்துள்ளார். அதாவது, கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அதிதி இல்லை இல்லை இந்த வழக்கை நான் உயர்நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதில், கோபமடைந்த நீதிபதி இது எங்களது கடமை. குடும்ப நல நீதிமன்றம் கவுன்சிலிங்கிற்கு பரிந்துரை செய்யும். கண்டிப்பாக சட்டத்திற்கு கட்டுப்படவேண்டும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



You must be logged in to post a comment.