மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் நேற்று கருப்பையா என்பவர் தனது இரு மகள்களுடன் சிலிண்டர்களை வெடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவத்தில் கருப்பையாவின் மனைவி கீதா கள்ளக்காதலனுடன் சென்றதாலே மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக போலிசார் விசாரனையில் தெரியவர
மனைவி கீதாவையும், கள்ளக்காதலன் ஆனந்த்-யையும் கைது செய்ய கோரி கருப்பையாவின் உறவினர்கள் தொட்டப்பநாயக்கணூர் விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.சம்பவமறிந்த உசிலம்பட்டி தாலுகா போலிசாா் விரைந்து சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு மறியலைக் கைவிடச் செய்தனா்.இதனால் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உசிலம்பட்டி அருகே தற்கொலை செய்து கொண்ட கணவரின் மனைவி மற்றும் கள்ளகாதலனை கைது செய்து கோரி சாலை மறியல்
எழுதியவர்: mohan November 1, 2019, 1:33 pm




You must be logged in to post a comment.