இராம நாதபுரம் மாவட்டம் மண்டபம் கேம்ப் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மரைக்காயர்பட்டிணம் பகுதியில் நீண்டகாலமாக இருக்கும் மின்கம்பம் ஒன்று முறிந்துவிழும் நிலையில் உள்ளது. இதன் உச்சிபகுதியானது உடைந்து விழும் நிலையில் காணப்படுகிறது. ஊரின் நடுவே உள்ள இந்த பழுதடைந்த மின்கம்பம் ஒருவேளை முறிந்து விழுந்தால் மிகபெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் அச்சம் தொிவித்தனா். ஆகவே மின்வாரியம் இதனை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது..!
செய்திபதிவாளர் முகம்மதுநயிம் சமூக ஆர்வலர் மரைக்காயர்பட்டிணம்




You must be logged in to post a comment.