17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் நீத்தார் நினைவு தின கடைபிடிப்பு

இராமநாதபுரத்தில் நீத்தார் நினைவு தின கடைபிடிப்பு

எழுதியவர்: mohan October 21, 2019, 6:09 pm

இராமநாதபுரம் ஆயுதப்படை வளாகம் .மற்றும் தனி ஆயுதப்படை மைதானத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் காவல் பணியின் போது வீர மரணம் அடைந்தோருக்கு நீத்தார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் ரூபேஷ் குமார் மீனா, இராமநாதபுரம் மாவட்டத்தில் பணியின்போது உயிர் தியாகம் செய்தோரா குடும்பத்தினருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தர்.மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவா ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, உச்சிப்புளி கடற்படை விமான நிலையம் கேப்டன் ஷினோத் கார்த்திகேயன், , வெங்கடேஷன்,மண்டபம் இந்திய கடலோர காவல் படை கமாண்டிங் அதிகாரி வெங்கடேஷன் ஆகியோர் கலந்து கொண்டனர். நீர்த்தார் நினைவு நாளை முன்னிட்டு கடந்த 17.10.2019-ம் தேதி செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு பரிசு வழங்கினர்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!