வேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்திராநகர் பகுதியில் துர்வாசன் என்பவர் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். அதன் கட்டிட பணிகள் சுமார் 5க்கும் மேற்பட்ட கட்டிட பணியாளர்கள் பணியில் இருந்து வந்த நிலையில் மேல்தள பகுதியில் பணியின் போது
அருகில் இருந்த மின்சார கம்பியை கவனிக்காமல் பணி நேரத்தில் திடீரென்று மேஸ்திரி பச்சையப்பன் மீது தோள்பட்டையில் மின்சார வயர் பாய்ந்ததில் அவர் மின்சாரம் தாக்கி கட்டிடத்தின் மேல் பகுதியில் சிக்கி துடிதுடித்து மேலே உயிர்ழந்து சிக்கிக்கொண்டார். அவரை காப்பாற்ற முற்படும்போது விஜய் மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு மேல்தளத்தில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தற்போது ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் மின்சாரம் தாக்கி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆம்பூர் கட்டிட பணியின் போது மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரிகள் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
எழுதியவர்: mohan October 16, 2019, 6:44 pm




You must be logged in to post a comment.