மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், வாடிப்பட்டியை சேர்ந்த மிகவும் கஷ்டப்படும் நிலையில் இருந்த வயதான ஏழை தம்பதியருக்கு உணவகம் நடத்துவதற்கு தேவையான உபகரணங்களை அறக்கட்டளையின் நிறுவனர்
மணிகண்டன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மக்கள் தொண்டன் அசோக்குமார், ஒருங்கிணைப்பாளர் கண்ணன், சிம்மக்கல் வீடற்ற ஏழை களின் இல்ல மேலாளர் சிபி கிரேஸியஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.கடந்த பத்து வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இந்த அறக்கட்டளையின் நிறுவனர் மணிகண்டன் அவர்கள் பல ஏழை, எளியவர்களுக்கு உதவி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் வயதான ஏழை தம்பதியருக்கு உதவி
எழுதியவர்: mohan October 5, 2019, 12:51 pm




You must be logged in to post a comment.