கீழக்கரை பேரூந்து நிலையத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ் பேனர் மற்றும் அதனால் ஏற்படவிருக்கும் ஆபத்தையும் குறிப்பிட்டு கீழை நீயூஸ் இணையதளத்தில் தேசிய தலைவர் மனித நேய அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட மனுவை சுற்றிகாட்டி செய்தி வெளியிடப்பட்டது.
அதை தொடர்ந்து இன்று (28/09/2019) கீழக்கரை நகராட்சி நிர்வாகம் ஆபத்தான நிலையில் இருந்த தனியார் பேனர்கள் அனைத்தையும் நீக்கியுள்ளனர். இதற்கு உடனடி நடவடிக்கை எடுத்த நிர்வாகம் நாய் பிரச்சினை, சாக்கடை, டெங்கு, பேரூந்து நிலையத்தில் கொட்டப்படும் கழிவுகள் ஆகியவற்றுக்கும் உடனடி நடவடிக்கை எடுத்தால் மகிழ்ச்சி அடைவார்கள்.







You must be logged in to post a comment.