திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் சக்திவேல் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.இந்தப் போராட்டத்தில் நிலக்கோட்டை தாலுகா
பட்டிவீரன்பட்டி அம்பேத்கர் நகரில் உள்ள ஆதி திராவிடர் மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பட்டா கேட்டு மனு கொடுத்தும் இதுவரை பட்டா வழங்காததை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.இந்த போராட்டத்தில் மாநில துணைச் செயலாளர் திருசித்தன், வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், மாவட்ட அமைப்பாளர் காதர்மைதீன், நிலக்கோட்டை ஒன்றிய துணைச் செயலாளர் சுதந்திரம், உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா




You must be logged in to post a comment.