மேலூர் உட்கோட்டம் மேலூர் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் ஜாகிர் உசைன் தலைமையில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி மேலூர் டிவிஎஸ் கம்பெனி வளாகத்தினுள் நடைபெற்றது. வேன் மற்றும்
பஸ் டிரைவர்களுக்கு வாகனத்தை சாலையில் ஓட்டிச் செல்லும்போது வாகன ஓட்டிகள் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் பற்றியும் குடி போதையில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விளைவுகள் பற்றியும் போக்குவரத்து எச்சரிக்கை சமிக்கைகள் பற்றியும் விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. இதனை டிவிஎஸ் கம்பெனி மேலாளர் மற்றும் அலுவலர்கள் வரவேற்று வெகுவாக பாராட்டினர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.