மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு நேரு நகர் நேதாஜி மெயின் ரோட்டில் குடிநீர் திறந்து மூடும் மூடி கடந்த சில நாட்களுக்கு முன் மண்களால் அடைப்பு ஏற்பட்டு பின் மிகப் பெரிய பள்ளமானது. அந்த பள்ளத்தை மூடாமல் மழைநீர் தேங்கியதால் டெங்கு கொசு உருவாகியது. மேலும் இந்தக் பள்ளத்தில் பல இருசக்கர வாகனத்தில் விழுந்து விபத்தில் சிக்கின. இது பற்றி நமது கீழை நியூஸில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் செய்தி வெளியிட்டு இருந்தோம். இதனைத்தொடர்ந்து இன்று28.09.19 மாநகராட்சி அதிகாரிகள் அந்த நீரை அகற்றி அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.பொதுமக்கள் கீழை நியூஸிற்கு பாராட்டுத் தொிவித்தனா்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.