மதுரை டவுன், மீனாம்பாள்புரம், குலமங்கலம் மெயின் ரோட்டில் செல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலைய தலைமை காவலர் முகமது ஹுசைன் ரோந்து பணியில் இருந்த போது
கவியரசு முன்விரோதம் காரணமாக பழிக்குப்பலிவாங்கும் எண்ணத்தில் ரஞ்சித் @ கழுவன் என்பவரை கத்தியால் குத்திக்கொண்டிருந்தவரை தலைமை காவலரை பார்த்தவுடன் தப்பி ஓடியவரை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் விரட்டிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து பின்னர் காயம்பட்ட ரஞ்சித் @ கழுவன் என்பவரை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்து அவரது உயிரை காப்பாற்றினார். தலைமை காவலரின் மெச்சத்தகு பணியை பாராட்டி மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமை காவலரை நேரில் வரவழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்து பண வெகுமதியும் வழங்கினார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.