18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

எழுதியவர்: mohan September 25, 2019, 5:13 pm

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிடத் தொழிலாளர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் “கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை சீரழிக்கும் புதிய தொழிலாளர் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளிக்கு இலவச வீடு கட்டி கொடுக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!