திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வனச்சரக அலுவலர் ஜெயசீலன் தலைமையில் வனவர் முருகன், வனக்காப்பாளர் ரவி, வனக்காவலர் தமிழ்வேந்தன் கொண்ட தனிக்குழுவினர் நத்தத்தில் உள்ள கரந்தமலை வனகாப்புக்காடு பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது அந்த பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். அவர் வன அலுவலர்களை கண்டதும் ஓட்டம் பிடித்தார்.அவரை வன அலுவலர்கள் குழுவினர் விரட்டிப்பிடித்து விசாரித்ததில் பெரியமலையூரைச் சேர்ந்த வைரக்கண்ணு(25) என்பதும், அவர் வைத்திருந்தது கள்ள நாட்டுதுப்பாக்கி என்றும் தெரிய வந்தது. அதன் பேரில் வைரக்கண்ணை கைது செய்த வனத்துறையினர் கள்ளத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவரை நத்தத்தில் உள்ள வனத்துறை அலுவலகம் கொண்டு வந்து விசாரணை செய்து நீதி மன்றத்திற்கு அழைத்து சென்றனர்.
நத்தம் வனப்பகுதியில் கள்ள துப்பாக்கியுடன் ஒருவர் கைது
எழுதியவர்: mohan September 25, 2019, 4:14 pm




You must be logged in to post a comment.