தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் மதுரையில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.மதுரை மாவட்ட தலைவராக செல்லத்துரை, துணைத் தலைவர்களாக பிச்சைமணி, மலைச்சாமி, செயலாளராக சவுந்தரபாண்டியன், இணைச் செயலாளர்களாக பாண்டி, மாயாண்டி, துணை செயலாளராக சிவபாண்டியன், அமைப்பு செயலாளராக சின்னன், பொருளாளராக காளியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக செந்தில் குமார், கணேசன் தேர்வாகினர்.
மேலும் நகர் தலைவராக பாலமுருகன், துணைத்தலைவராக தங்கவேலு, மனோகரன், பாஸ்கரன், செயலாளராக அருணாச்சலம், இணைச் செயலாளர்களாக கண்ணன், மகேந்திரன், துணை செயலாளராக தங்கப்பாண்டி, அமைப்பு செயலாளராக சுவாமிநாதன், பொருளாளராக பாக்கியம், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக இ.ரா.தனுஷ்கோடி, பாலமுருகன் தேர்வு பெற்றனர்.
தேர்தல் அலுவலராக மாநில துணை தலைவர் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க துணை தலைவர் தே.செல்லத்துரை கலந்து கொண்டார்.போட்டியின்றிதேர்வான நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்




You must be logged in to post a comment.