மதுரை மாநகராட்சி 76 வது வார்டு உட்பட்ட நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு குடிநீர் குழாய் உள்ளது.இது கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சுமார் 5 அடி ஆழத்திற்கு மேல் மூன்று அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அதில் மழைநீரும் சேர்ந்து உள்ளதால் டெங்கு கொசு உருவாகியுள்ளது .இதனால் அந்த பகுதியில் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மாநகராட்சியிடம் பலமுறை தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள் .மேலும் இந்த குழியில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பலர் இதில் விழுந்து காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர் ..
மதுரையில் டெங்கு நோய் பரவும் அபாயம்.. தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமா மதுரை மாநகராட்சி
எழுதியவர்: mohan September 24, 2019, 4:20 pm




You must be logged in to post a comment.