திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய
ஆணையாளர் லாரன்ஸ் தலைமை தாங்கி விழிப்புணர்வு பிரசுரம் வினியோகித்து நிகழ்ச்சியைத் துவங்கி வைத்து பேசினார். இதில் ஊட்டச்சத்து உண்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள் பற்றியும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவாமல் இருப்பது விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் ரேவதி சமூக நலத்துறை அலுவலர்கள் லட்சுமி , அங்கன்வாடி பணியாளர்கள் கீதா ,ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்
எழுதியவர்: mohan September 21, 2019, 1:03 pm




You must be logged in to post a comment.