கீழக்கரை வடக்குத் தெரு அல் ஜதீத் வாலிபால் கிளப் சார்பாக மாபெரும் மின்னொளி மாவட்ட அளவிளான வாலிபால் போட்டி வரும் 21 மற்றும் 22 செப்டம்பர் அன்று நடைபெற உள்ளது.
இந்த மாவட்ட அளவிளான போட்டி அல் ஜதீத் வாலிபால் கிளப் சார்பாக தொடர்ச்சியாக 27வருடமாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மாவட்ட அளவிளான போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் ₹.500/- செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
இப்போட்டியல் பங்கு பெற்று வெற்றி பெரும் அணிக்கு ₹.12,000/-, ₹.10,000/-, ₹.8,000/-, ₹.6,000/- என முதல் நான்கு பரிசுகள் முறையே வழங்கப்பட உள்ளது. மேலும் காலிறுதி போட்டி வரை வரும் அணிக்கு ஆறுதல் பரிசாக ₹.1.000/- வழங்கப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிகள் கீழக்கரை வடக்குத் தெரு மணல் மேட்டில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.





You must be logged in to post a comment.