மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கிராம பகுதிகளில் 1000மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் அல்லிகுண்டம் கிராமத்தில் உள்ள சாலைபகுதியின் ஓரமாக சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மரக்கன்றுகள் நட்டு, தண்ணீர் ஊற்றி
தொடங்கிவைத்தார். அதனைதொடர்ந்து வத்தலகுண்டு சாலை, பேரையூர் சாலை, மற்றும் சேடபட்டி, செல்லம்பட்டி போன்ற பகுதியில் உள்ள சாலைகளின் ஓரமாக மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி நகரசெயலாளர் பூமாராஜா, மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், நெடுஞ்வாலைத்துறை அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
உசிலம்பட்டியில் ஊரகப்பகுதி சாலை ஓரத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி தொடங்கிவைத்தார்.
எழுதியவர்: mohan September 18, 2019, 2:50 pm




You must be logged in to post a comment.