இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் SM. யூசுப் தலைமை தாங்கினார். இயக்குனர் PRLA ஹாமீது இபுராஹிம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் E. ரஜபுதீன் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஹமீதியா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜவாஹிர் ஃபாரூக் திருவரங்கம் புனித தல மேல்நிலைப் பள்ளியின் முதுநிலை கணித ஆசிரியர் M லாசர் காடரந்தங்குடி மேல்நிலைப்பள்ளி முதுநிலை இயற்பியல் ஆசிரியர் B வேல்முருகன் கீழத்தூவல் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆரோக்கியம் பன்னீர் செல்வம் மற்றும் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவர் RD நெல்சன் டேனியல் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மேல் நிலைக் கல்வி பற்றிய ஆலோசனை மற்றம் விழிப்புணர்வு சொற்பொழிpவு ஆற்றினார்கள்.


இந்நிகழ்ச்சியில் இராமநாதபுர மாவட்டத்தைச் சார்ந்த 1200கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியாக முதுகலை வணிகயவியல் துறைத் தலைவர் டாக்டர் P பாலக்கிருஷ்ணன் அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்;ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக வேதியல் துறைத் தலைவர் A அப்துல் சர்தார் நுண்ணுயிரியல் துறைத்த தலைவர் டாக்டர் M ஆனந்த் மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர் RD நெல்சன் டேனியல் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சி நாளையும் பிற துறைசார்ந்த வல்லுனர்களுடன் தொடரும் என்று அறியப்படுகிறது.






You must be logged in to post a comment.