மதுரை மாவட்டம் புது மகாலிபட்டி ரோட்டில் அமைந்துள்ள மதுரை ராமேஸ்வரம் ரயில்வே பாதையில் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதிமூலம் 46 . ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி நிகழ்வு இடத்திலேயே உடல் சிதறி பலியானார். தகவலறிந்த மதுரை ரயில்வே காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து இரும்புப் பாதை காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.