திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலை அடிவாரத்தில் விதைபந்துகள் தூவும் நிகழ்ச்சிநடைபெற்றது .போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் சாணார் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் மாணவர்களும் உருவாக்கிய விதைபந்துகளில் புங்கன் தான்றிகாய் மலைவேம்பு கடுகாய் வேம்பு புளியன் உள்ளிட்ட விதைகளை கொண்டு விதை பந்துகளை மாணவர்கள் தயாரித்தனர்.விதைபந்துகளை தயாரித்த மாணவர்கள் முன்னிலையில் மலை அடிவாரத்தில் விதைபந்துகள் தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது .மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமை தாங்கினார் மாவட்ட உதவி வனபாதுகாவலர் ராஜ்குமார் போளூர் வனச்சரகர் செந்தில்குமார் துளீர் தொண்டு நிறுவன பொறுப்பாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட 1.25லட்சம் விதைபந்துகள் தூவும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி துவக்கி வைத்தார்.அதனைதொடர்து ஜவ்வாது மலை முழவதும்விதை பந்துகள் தூவும்பணியினை தொண்டு நிறுவனம் போளூர் பேருராட்சி ஆகியவைகலந்து கொண்டது நிகழ்ச்சியில் போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் உடற்கல்வி ஆசிரியர் ஏழமலை வனவர் கோவிந்தன் போளூர் பேருராட்சி செயல் அலுவலர் முகமது ரிஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டனர். விதைபந்துகள் தூவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஜெய்மாருதி மோட்டார் உரிமையாளர் குரு மதிய உணவு வழங்கினார் போளூர் பசுமைசேவை களம் நிர்வாகிகள் மற்றும் சமுக ஆர்வலர்கள் உட்பட கலந்து கொண்டனர்.
போளூரில் 1லட்சம் விதைபந்துகள் தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி துவக்கி வைத்தார்.
எழுதியவர்: mohan September 15, 2019, 1:34 pm




You must be logged in to post a comment.